கோவை, நவம்பர் 3: சென்னையில் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனவும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் மட்டுமே தமிழக அமைச்சர்கள் அக்கறை செலுத்துவதால் மழை பாதிப்புகள் குறித்து கவலைப்படுவதில்லை எனவும் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த புகழேந்தி குற்றம்சாட்டினார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"இரட்டை இலை சின்னத்தை முடக்கியது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தினகரன் தரப்பு காலதாமதம் செய்யவில்லை. இரட்டை இலை சின்னம் எங்களது அணிக்கே கிடைக்கும்.
பிரதமர் மோடி இருப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற தனது கருத்து குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விளக்கமளிக்க வேண்டும். உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க டிடிவி தினகரன் அணி தயாராக உள்ளது. ஆனால் தமிழக அரசு தேர்தலை சந்திக்க பயப்படுகிறது. ஒருவேளை இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை எனில் தொப்பி சின்னத்தில் போட்டியிட தயாராக உள்ளோம்.
சென்னையில் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை. இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் மட்டுமே தமிழக அமைச்சர்கள் அக்கறை செலுத்துவதால் மழை பாதிப்புகள் குறித்து கவலைப்படுவதில்லை.
திமுக தலைவர் கருணாநிதி ஒரு மணி நேரம் நல்ல நினைவாற்றல் பெற்றால் இந்த ஆட்சி கலைக்கப்படும். இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. திமுக-விற்கும், தினகரன் அணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி விசாரணையில் நம்பிக்கையில்லை என்பதால், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு மோடியைப் பிடிக்காது. அவர் காங்கிரஸ் ஆதரவாளர் என்பதால் மன்மோகன்சிங் பிரதமராக இருப்பதாக நினைத்து பேசியுள்ளார்".
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"இரட்டை இலை சின்னத்தை முடக்கியது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தினகரன் தரப்பு காலதாமதம் செய்யவில்லை. இரட்டை இலை சின்னம் எங்களது அணிக்கே கிடைக்கும்.
பிரதமர் மோடி இருப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற தனது கருத்து குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விளக்கமளிக்க வேண்டும். உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க டிடிவி தினகரன் அணி தயாராக உள்ளது. ஆனால் தமிழக அரசு தேர்தலை சந்திக்க பயப்படுகிறது. ஒருவேளை இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை எனில் தொப்பி சின்னத்தில் போட்டியிட தயாராக உள்ளோம்.
சென்னையில் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை. இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் மட்டுமே தமிழக அமைச்சர்கள் அக்கறை செலுத்துவதால் மழை பாதிப்புகள் குறித்து கவலைப்படுவதில்லை.
திமுக தலைவர் கருணாநிதி ஒரு மணி நேரம் நல்ல நினைவாற்றல் பெற்றால் இந்த ஆட்சி கலைக்கப்படும். இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. திமுக-விற்கும், தினகரன் அணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி விசாரணையில் நம்பிக்கையில்லை என்பதால், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு மோடியைப் பிடிக்காது. அவர் காங்கிரஸ் ஆதரவாளர் என்பதால் மன்மோகன்சிங் பிரதமராக இருப்பதாக நினைத்து பேசியுள்ளார்".
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.